தாம்பரம் மற்றும் திருவள்ளுவர் பகுதிகளில் 17 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு, இழப்பீட்டுத் தொகை ரூ 15.55 இலட்சம் வசூல்

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அமலாக்க அதிகாரிகள் சென்னை/தெற்கு-ஐஐ மற்றும் காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட தாம்பரம் மற்றும் திருவள்ளுர் பகுதிகளில் கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது 11 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகை ரூ.1,09,000/-  செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: