மதுரை : யூடியூபை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு வழிமுறைகளை தேவை என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. தமிழக முதல்வா் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறான கருத்துக்களையும், விடியோக்களையும் யூடியூபா் சாட்டை துரைமுருகன் வெளியிட்டாா். இதுதொடா்பாக போலீஸாா் அவரை கைது செய்தனா். இந்த வழக்கில் அவருக்கு உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது. இதனிடையே, மீண்டும் தமிழக முதல்வா் குறித்து யூடியூபா் துரைமுருகன் அவதூறாக விடியோ பதிவிட்டதாக அவா் மீது மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து நிபந்தனையை மீறி செயல்பட்டதால், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவை ரத்து செய்யுமாறு காவல் துறை தரப்பில் உயா்நீதிமன்ற மதுரைக் கிளை மனு தாக்கல் செய்யப்பட்டது.