ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி மலை அடிவாரத்தில் மர்ம நபர்கள் காட்டுக்கு தீ வைத்ததால் அரியவகை மரங்கள், மூலிகைச் செடிகள் எரிந்து நாசமானது.திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் அருகே உள்ள தாமரைக் குளம் பகுதியில் உள்ள ஏலகிரி மலை அடிவாரத்தில் நேற்று மதியம் மர்ம நபர்கள் காட்டுக்கு தீ வைத்து விட்டு சென்றுள்ளனர். இதனால் சிறிதளவில் பிடித்த தீயானது மளமளவென பரவி சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு ஏலகிரி மலை மீது தீப்பிடித்து எரிந்தது. இதனால் மலை மீது இருந்த அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகளும் எரிந்து நாசமானது.நாள்தோறும் மர்ம நபர்கள் மலையடிவாரத்திற்கு சென்று மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயலில் ஈடுபட்டு வருவதால் புகைப்பிடித்து வீசி விட்டுச் செல்கின்றனர்.