சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, விசிக தலைவர் திருமாவளவன் நேற்று சந்தித்தார். அப்போது, விசிக துணை மேயர், நகர்மன்ற தலைவர்கள் முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்தார். அப்போது, விசிக கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், ராணிப்பேட்டை நகர்மன்ற துணை தலைவர் ரமேஷ் கர்ணா, திண்டிவனம் நகர்மன்ற துணை தலைவர் ராஜலட்சுமி ஆகியோர் முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர்.பின்னர், திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மேயர், துணை மேயர், தலைவர், துணை தலைவர் தேர்வில் சில இடங்களில் குளறுபடிகள் நடந்தது. குறிப்பாக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக போட்டி வேட்பாளர்கள் களத்தில் இறங்கினர். அதனை முதல்வரின் கவனத்துக்கு எடுத்து சென்றோம். இதில், அவர் கவனம் செலுத்தி எங்கெங்கு அவ்வாறு நடந்ததோ அங்கெல்லாம் சீர் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். அதையும் மீறி சில இடங்களில் குழப்பங்கள் நடந்தது.