திருத்துறைப்பூண்டி நகராட்சி துணை தலைவர் ஆர்.எஸ்.பாண்டியன் ராஜினாமா?

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் நேற்று நடைபெற்ற தலைவர் தேர்தலில் திமுக சார்பில் கவிதாபாண்டியன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்த நகராட்சியின் துணை தலைவர் பதவி கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் மாலையில் நடைபெற்ற துணைத்தலைவர் தேர்தலில் 5வது வார்டில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட திமுக நகர செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன் மனு தாக்கல் செய்திருந்தார். இதனால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.  இந்நிலையில் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி ஆர்.எஸ் பாண்டியன் தனது துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Stories: