விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வீரபாண்டியன் தெருவை சேர்ந்தவர் கொளஞ்சி (46), மூட்டை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி அமுதா, நகராட்சி துப்புரவு பணியாளர். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்களது இளைய மகன் நிஷாந்த்(21), விருத்தாசலம் தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு வரை படித்துள்ளார். பின்பு இவரை திருச்சி அருகே ஒரு தனியார் பள்ளியில் சேர்த்துள்ளனர். அங்கு 10ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டிற்கு வந்த இவர், வீட்டில் பெண்கள் செய்யும் சமையல் வேலை உள்ளிட்ட பல வேலைகளை செய்துகொண்டு பெண்களோடு நட்புறவை ஏற்படுத்திக் கொண்டு பழகி வந்துள்ளார். இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் விசாரித்ததில் அவருக்கு தான் பெண்ணாக மாற வேண்டும் என்ற ஆசை இருந்ததை அறிந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து நிஷாந்தை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்.