திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு லிங்கோத்பவருக்கு நள்ளிரவில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாகவும், நினைக்க முக்தித்தரும் திருத்தலமாகவும் அமைந்துள்ள திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுடன் நேரடி தொடர்புடையது லிங்கோத்பவர் வழிபாடு. அண்ணாமலையார் திருக்கோயில் சுவாமி சன்னதியின் மேற்கு திசையில் அமைந்துள்ள லிங்கோத்பவர் திருமூர்த்தம், ஆன்மிக உட்பொருள் நிறைந்த கலைநயத்துடன் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இறைவன் திருமேனியான அண்ணாமலையும், அதன் மீது காட்சி தரும் தீபமும் இந்த திருமூர்த்தத்தில் காட்சித் தருகிறது.