நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகம் சீகூர், சிங்காரா வனப்பகுதிகளில் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் காமராஜர் சாகர் அணையிலிருந்து தண்ணீரை திறக்க வேண்டும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதுமலை புலிகள் காப்பத்தில் வறட்சி தொடங்கியதை அடுத்து சீகூர், சிங்காரா வனப்பகுதிகளில் விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடும் உறைபனி பொழிவு இருந்ததால் வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டது. பகல் நேரங்களில் கடும் வெயிலின் தாக்கம் இருப்பதால் சீகூர், சிங்காரா வனப்பகுதிகளில் நீர், நிலைகள் வேகமாக வறண்டு வருகின்றன.