ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கருணை அடிப்படையில் பணி ஆணை

சென்னை: அரசு பணியில் இருக்கும்போது  இறந்த அரசு பணியாளர்களின் சட்டப்பூர்வமான வாரிசுதாரர்களுக்கு உதவுவதற்காக அரசால், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஈப்பு ஓட்டுநராக பணிபுரிந்து 19.06.2014 அன்று பணியிடையே காலமான சகாயராஜ் என்பவர் மகன் அரவிந்த்ராஜ் என்பவருக்கு கருணை அடிப்படையில் ஈப்பு ஓட்டுநராக நேற்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பணி நியமன ஆணைகள் வழங்கினார். இந்த நிகழ்வில் துறை ஆணையர் மதுமதி மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

Related Stories: