கோவில்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கோவில்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே துறையூர் கிராமத்தில் நேற்று பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பட்டாசு ஆலை விபத்தில் ராமர், ஜெயராஜ், தங்கவேல் மற்றும் கண்ணன் ஆகியோர் உயிரிழந்தனர்.

Related Stories: