திமுக வெற்றி சமூகநீதி மற்றும் சமத்துவத்திற்கு கிடைத்த வெற்றி: தென்னிந்திய திருச்சபை பேராயர் வாழ்த்து

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற இந்த மாபெரும் வெற்றி திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் ஏற்றுள்ள சமூகநீதி, சமத்துவம் மற்றும் சமயசார்பின்மை கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றியாகும் என சிஎஸ்ஐ சென்னை பேராயர் ஜெ.ஜார்ஜ் ஸ்டீபன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து சிஎஸ்ஐ சென்னை பேராயர் ஜெ.ஜார்ஜ் ஸ்டீபன் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தி: நடந்து முடிந்த 2022ம் ஆண்டின் தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி அமோக வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகிறது. இந்த மாபெரும் வெற்றி திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் ஏற்றுள்ள சமூகநீதி, சமத்துவம் மற்றும் சமயசார்பின்மை கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றியாகும். அத்துடன் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆட்சியின் சாதனைகளுக்கும், அவரது எளிமைக்கும் தமிழ்நாட்டின் அனைத்து மக்கள் மீதும் அவர் காட்டி வரும் அக்கறைக்கும் மக்கள் அளித்துள்ள தீர்ப்பே இந்த வெற்றியாகும். இக்கூட்டணியில் வெற்றி பெற்றுள்ள யாவருக்கும் அவர்களை வெற்றிக்கு வழிநடத்திய முதல்வருக்கும் தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயத்தின் சார்பிலும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு வாழ்த்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: