சென்னை: அகில இந்திய பார்கவுன்சில் துணை தலைவராக தமிழ்நாடு பார்கவுன்சில் உறுப்பினர் மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன் பதவி வகித்து வந்தார். அகில இந்திய பார்கவுன்சில் தலைவராக மனன் குமார் மிஸ்ரா பதவி வகித்து வருகிறார்.இந்த பதவிகளுக்கான காலம் முடிவடைந்த நிலையில் மீண்டும் தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 6ம் தேதி அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பாணைக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அகில இந்திய பார்கவுன்சிலின் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. அப்போது, அறிவிப்பாணையை எதிர்த்தவர்கள் தங்கள் எதிர்ப்பை வாபஸ் பெற்றனர்.