முன்னாள் எம்.பி.யும் பாஜக பிரமுகருமான சசிகலா புஷ்பாவுக்கு சென்னை ஐகோர்ட் நிபந்தனை முன் ஜாமின் வழங்கி உத்தரவு

சென்னை: முன்னாள் எம்.பி.யும் பாஜக பிரமுகருமான சசிகலா புஷ்பாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமின் வழங்கி உள்ளது. 15 நாட்கள் சென்னை ஜெ.ஜெ. நகர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், தலைமறைவாக இருக்கக் கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அவரது கணவர் ராமசாமி அளித்த கொலை மிரட்டல் புகாரில் சசிகலா புஷ்பா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

Related Stories: