சென்னை: சென்னை விருகம்பாக்கம், ஜெய்ன் கென்ஸ் அபார்ட்மெண்ட் ரெட்டி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பின் 3வது தளத்தில் பொறியியல் தம்பதி தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகின்றனர். நேற்று மாலை மூத்த மகள் பள்ளியில் இருந்து அழைத்து வர அவரது தாய் வெளியே சென்றுவிட்டார். அப்போது வீட்டில் இளைய மகள் சாய் கிராணா(7) தூங்கி கொண்டிருந்ததால் அவரது தாய் வீட்டின் கதவை பூட்டாமல் சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி கதவு தானாக பூட்டி கொண்டது. இதனால் உள்ளே சிக்கி கொண்ட சாய் கிராணா வெளியே வரமுடியாமல் அழுதுகொண்டு இருந்துள்ளார். வீட்டின் சாவியை எடுத்து செல்லாததால் பூட்டிய வீட்டின் கதவை திறக்க முடியாமல் அவரது தாய் தவித்தார்.