மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வீட்டில் சட்டவிரோதமாக வெடி தயாரித்தபோது விபத்து: ஒருவர் உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லிவீரன்பட்டியில் வீட்டில் சட்டவிரோதமாக வெடி தயாரிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த மற்றொரு நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சக்திவாய்ந்த நாட்டு வெடி வெடித்ததில் வீடு தரைமட்டம் ஆனதுடன் சுந்தர்ராஜ் உடலும் சின்னாபின்னமானது.

Related Stories: