சென்னை: நுங்கம்பாக்கம் பகுதியில் காவல் அணி வகுப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சென்னை மாநகராட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதனால் பதற்றமான மற்றும் மிக பதற்றமான வாக்கு சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி, காவல் அணி வகுப்பு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்கு அளிக்கும் வகையில் காவல் அணி வகுப்பு நேற்று மாலை நடைபெற்றது.