ராமேஸ்வரம்: எல்லை தாண்டியதாக குற்றம் சாட்டி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இவர்கள் நள்ளிரவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், அவர்களை தடுத்து, அங்கிருந்து விரட்டியடித்தனர். அச்சமடைந்த மீனவர்கள் படகுகளை வேறு பகுதிகளுக்கு ஓட்டிச் சென்றனர். இருப்பினும் விடாமல் விரட்டி வந்த இலங்கை கடற்படையினர் 2 விசைப்படகுகளில் இருந்த ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேரை சிறைபிடித்தனர்.