வருசநாடு : கடமலை மயிலை ஒன்றியம் பொன்னம்படுகை ஊராட்சிக்குட்பட்ட தெய்வேந்திரபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பொது மக்களின் வசதிக்காக பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டது. அதன்பின் பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி நிழற்குடை உள்ளது.இந்நிலையில் குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது. மேலும். முட்புதர்கள் அடர்ந்து விஷ ஜந்துக்கள் உலாவரும் இடமாகவும் காட்சியளிக்கிறது. இதனால், அப்பகுதி கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.