திமுக வேட்பாளர் ஜெ.கே.மணிகண்டனை ஆதரித்து அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ பிரசாரம்

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலம் 186வது வார்டு திமுக வேட்பாளர் ஜெ.கே.மணிகண்டனை ஆதரித்து, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் நேற்று புழுதிவாக்கம் ஓட்டேரி சாலை, பஜனை கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:திமுக வேட்பாளர் ஜெ.கே.மணிகண்டனை நீங்கள் வெற்றிபெற செய்தால், தமிழக முதல்வரின் அனைத்து திட்டங்களும், உங்கள் பகுதிக்கு விரைந்து வந்துசேரும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தாமான சாலை வசதி, குடிநீர் வசதி, விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் போன்ற பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. புழுதிவாக்கத்திற்கு மீண்டும் பேருந்து இயக்கப்பட்டுள்ளது. மேலும் பல வளர்ச்சி திட்டங்கள் உங்களை வந்தடைய ஜெ.கே.மணிகண்டனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுள்கள். இவ்வாறு அவர் பேசினார்.

வாக்கு சேகரிப்பின்போது, 186வது வட்ட திமுக பொறுப்பாளர் குமாரசாமி, வழக்கறிஞர் கமலநாதன், முன்னாள் கவுன்சிலர், புனிதன் ஜனார்த்தனன், ராமமூர்த்தி, லட்சுமணன், சுப.சரவணன், கோட்டீஸ்வரன், மகேஸ்வரன், குபேரா, யோகராஜன், ஆர்.மணிகண்டன், ரகுபதி, கோர்ட் மணி, பி.எம்.தினேஷ், மதுசூதனன், ரமேஷ், முரளி, பாண்டு, மகளிரணி சங்கீதா, வசுமதி, சுப, கலா, வனிதா, காங்கிரஸ் சார்பில் வட்டார தலைவர் லோகநாதன், மாவட்ட துணை தலைவர், ஆர்.பகத்சிங், வட்ட தலைவர் பி.குமார், மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: