ஆலந்தூர்: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆலந்தூர் 167வது வார்டில் திமுக சார்பில் வேட்பாளர் துர்காதேவி நடராஜன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து திமுக வட்ட செயலாளர் ஜெ.நடராஜன், கட்சி நிர்வாகிகளுடன் நங்கநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர், கொரோனா தொற்று, மழை வெள்ள பாதிப்பு போன்ற நேரங்களில் உங்களில் ஒருவனாக இருந்து அனைத்து உதவிகளையும் செய்துள்ளேன்.பல இடங்களில் வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தபோது, விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு உதவி செய்துள்ளேன். பல வருட கோரிக்கையை ஏற்று பட்டா வாங்கி தந்துள்ளேன். செல்போனில் அழைத்து உதவி கேட்கும் மக்களுக்கு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளேன்.