சென்னை: சென்னை மாநகராட்சி, 141வது வார்டில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன், தி.நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளான காமராஜர் காலனி மற்றும் லலிதாபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பெண்கள் மற்றும் இளைஞர்கள் உற்சாகமாக வரவேற்பளித்து, தங்களது ஆதரவினை தெரிவித்தனர். அப்போது, ராஜா அன்பழகன், ‘‘மழை காலங்களில் இங்குள்ள தெருக்களில் தண்ணீர் தேங்காமல், வெளியேறும் வகையில் வடிகால் அமைக்கப்படும். குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தரப்படும்.