சென்னை: மருத்துவ படிப்பில் வழங்கப்படும் 7.5% இட ஒதுக்கீட்டை 15% ஆக உயர்த்த வேண்டும் என நீட் தேர்வில் விலக்கு கோரும் சட்ட முன் வடிவு குறித்து புரட்சி பாரதம் கட்சி எம்.எல்.ஏ ஜெகன்மூர்த்தி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் அமைந்துள்ள நிகர்நிலை அனைத்து பல்கலைக்கழகங்களை தமிழ்நாடு அரசின் அதிகாரவரம்பிற்குள் கொண்டு வந்து சட்டம் இயற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.