சென்னை: நட்சத்திர பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த பெண் தொகுப்பாளரின் டிவிட்டர் பதிவுக்கு சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்ட நடிகர் சித்தார்த் மீது விமர்சனங்கள் எழுந்தது. இதையடுத்து தன்னுடைய டிவிட்டர் பதிவை நீக்கி நடிகர் சித்தார்த் தனது பதிவுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கோரியிருந்தார். ஆனாலும் இந்த விவகாரத்தில் நடிகர் சித்தார்த் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க என்று தேசிய மகளிர் ஆணையம் தமிழக காவல்துறைக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து சென்னை காவல் துறை சார்பில் நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது.