இங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலையை நிறுவும் தமிழக அரசின் முடிவிற்கு ஆராய்ச்சியாளர் சந்தான பீர்ஒளி பாராட்டு..!!

சென்னை: இங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலையை நிறுவும் தமிழ்நாடு அரசின் முடிவிற்கு, அவர் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் சந்தான பீர்ஒளி பாராட்டு தெரிவித்துள்ளது. சென்னை, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சந்தான பீர்ஒளி நன்றி தெரிவித்தார். தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்த பணத்தை செலவு செய்து அமைத்த கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் புதிய சிலையை அவர் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

Related Stories: