சென்னை மடிப்பாக்கம் திமுக வட்ட செயலாளர் கொலை வழக்கில் திருச்சியில் 2 பேர் கைது

திருச்சி: சென்னை மடிப்பாக்கத்தில் திமுக வட்ட செயலாளர் செல்வம் கொலை தொடர்பாக திருச்சி சமயபுரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து தப்பிச் சென்றபோது ராதாகிருஷ்ணன், தனசீலன் ஆகிய இருவரையும் திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை மடிப்பாக்கத்தில் கடந்த 1-ம் தேதி திமுக வட்டச்செயலாளர் செல்வம் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக மடிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். 188-வது வட்ட திமுக செயலாளர் செல்வம் கொலை வழக்கில் குற்றாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணையானது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக திருச்சி சமயபுரத்தில் வைத்து 2 பேரை மடிப்பாக்கம் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். ஒருகாரில் இருவர் தப்பி செல்வதாக கிடைக்கப்பட்ட தகவலின் பேரில் திருச்சி சமயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களுடன் மடிப்பாக்கம் தனிப்படை போலீசார் இணைந்து அவர்களை கைது செய்தனர்.

இன்று அதிகாலை அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் ராதாகிருஷ்ணன் சேலையூரை சேர்ந்தவர் என்றும், தனசீலன் என்பவர் தூத்துக்குடி மாவட்டத்திற் சேர்ந்தவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்ட அதிமுகவில் ஒருபொருப்பில் இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரையும் சென்னை கொண்டு வருவதற்காகன நடவடிக்கைகளை மடிப்பாக்கம் போலீசார் மேற்கொண்டுள்ளார்.

Related Stories: