ஒன்றிய, சிற்றலை ஒலிபரப்பை மூடும் திட்டத்தை கைவிட பிரசார் பாரதிக்கு அன்புமணி கோரிக்கை

சென்னை: பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: சென்னை வானொலியில் சிற்றலை  ஒலிபரப்பு சில மாதங்களுக்கு முன் மூடப்பட்டது. ‘பி’ அலைவரிசை கடந்த ஜனவரி 14ம் தேதியுடன் மூடப்பட்டு கோல்டு பண்பலையில் ஒலிபரப்பாகின்றன. ஒன்றிய அலை, சிற்றலை வானொலிகளை மூடுவதால் தரமான நிகழ்ச்சிகளை கிராம, தொலைதூரங்களிலும் உள்ள மக்கள் கேட்க முடியாத நிலை ஏற்படும். சென்னை ‘ஏ’ அலை வரிசையை மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள எந்த ஒன்றிய மற்றும் சிற்றலை ஒலிபரப்பையும் மூடும் திட்டத்தை பிரசார் பாரதி கைவிட வேண்டும்.

Related Stories: