மதுரை கே.கே.ரமேஷ் 2 ஆண்டுகள் பொதுநல வழக்கு தொடர சென்னை உயர்நீதிமன்றம் தடை..!!

சென்னை: மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் 2 ஆண்டுகள் பொதுநல வழக்கு தொடர சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஊழல் குற்றசாட்டுக்குள்ளான அதிகாரிகளின் சொத்துக்களை முடக்க கோரிய கே.கே.ரமேஷின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பொதுநல வழக்கு முறையாக தாக்கல் செய்யவில்லை; விளம்பரத்துக்காக தாக்கல் செய்ததால் ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அரசு அலுவலங்களில் சிசிடிவி கேமரா பொருத்தவும், லஞ்சம் வாங்கக்கூடாது என பெயர்ப்பலகை வைக்கவும் கோரியிருந்தார்.

Related Stories: