சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 22 ஆயிரத்து 238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி 38 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு கடந்த வாரம் 30 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்த போதும் தொற்று பரவலின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதையடுத்து கடந்த ஒரு வாரமாக பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த நிலையில் நேற்று 22,238 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைப்போன்று சென்னையிலும் பாதிப்பு எண்ணிக்கை 3,998 ஆகவும் குறைந்துள்ளது.