தமிழகத்தில் புதிதாக 22,238 பேருக்கு கொரோனா: சிகிச்சை பலனின்றி 38 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 22 ஆயிரத்து 238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி 38 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு  கடந்த வாரம் 30 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்த போதும் தொற்று பரவலின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதையடுத்து கடந்த ஒரு வாரமாக பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த நிலையில் நேற்று 22,238 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைப்போன்று சென்னையிலும்  பாதிப்பு எண்ணிக்கை 3,998 ஆகவும் குறைந்துள்ளது.

இது குறித்து  மக்கள்  நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று  22,238 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,03,926 ஆக உள்ளது. 26,624 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 38 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் நேற்று 3,998 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. கோவையில் 2,865, செங்கல்பட்டு 1,534, ஈரோடு 1,127, சேலம் 1,181, திருப்பூர் 1,497 ஆகிய 6  மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது.

Related Stories: