சிவன் கோயில்களில் சனிப்பிரதோஷம்

திருத்தணி: திருத்தணி அடுத்த நாபளூர் கிராமத்தில் காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோயிலில் நேற்று சனிப்பிரதோஷ விழா நடந்தது. தொடர்ந்து, வடூக பைரவர், நந்தி மற்றும் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு உற்சவர் சிவன் - பார்வதி எழுந்தருளி கோயில் வளாகத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதேபோல், திருத்தணி நந்தி ஆற்றங்கரையோரம் உள்ள வீரட்டீஸ்வரர் கோயில், பழைய தர்மராஜா கோயில் தெருவில் உள்ள சதா சிவலிங்கேஸ்வரர் கோயில், அகூர் திருவேட்டீஸ்வரர் ஆகிய கோயில்களில் சனிப்பிரதோஷ வழிபாடு நடந்தது. இதேபோல், நகரி டவுனில் உள்ள கரகண்டீஸ்வரர் கோயிலில் நடந்த சனிப்பிரதோஷ வழிபாடு விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: