மும்பை: இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகை ஸ்வரா பாஸ்கர் ஒரு தேச துரோகி என்று சினிமா தயாரிப்பாளர் அசோக் பண்டிட் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இந்தியா - அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, ‘இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்துள்ளது’ என்று தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதற்கிடையில், திரைப்பட தயாரிப்பாளர் அசோக் பண்டிட் அளித்த பேட்டியில், ‘அமெரிக்க முஸ்லிம் கவுன்சிலின் சர்வதேச மேடையில் பேசும்போது, முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி பேசியது மத நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்நிகழ்ச்சியில் நடிகை ஸ்வரா பாஸ்கரும் கலந்துகொண்டார்.