கர்நாடக: கர்நாடக முன்னாள் முதல்வரும் பா.ஜ.க மூத்த தலைவருமான எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா பெங்களூருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்நிலையில் சவுந்தர்யாவின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான பி.எஸ் .எடியூரப்பாவின் மகள் வழி பேத்தி சௌந்தர்யா. இவருக்கு வயது 30 ஆகும். சௌந்தர்யாவுக்கு 6 மாத குழந்தை உள்ளது. சவுந்தர்யா மத்திய பெங்களூருவில் ஒரு அடுக்குமாடு குடியிருப்பில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார்.