சென்னை: இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கை தொடருவதா, வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கூட்டியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த 7ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும் கடந்த 9, 16, 23 ஆகிய மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டது. சனிக்கிழமை இரவு 10 மணியில் இருந்து திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டது. வழிபாட்டு தலங்களுக்கு வெள்ளி, சனி ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை. அரசு கொண்டுவந்த இந்த கட்டுப்பாடுகள் வருகிற 31ம் தேதி வரை அமலில் இருக்கும். ஆனாலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு குறித்து ஒவ்வொரு வாரமும் முதல்வர் தனியாக அறிவித்து வருகிறார்.