சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது பின்னலூர் ஊராட்சி, புவனகிரி ஒன்றியத்திற்குட்பட்டதாகும். இந்த ஊராட்சியில் 1500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், 2000த்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகளும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் இக்கிராமத்தில் உள்ள குடியிருப்புகளில் புகுந்து சமையலுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், அரிசி, பருப்பு வகைகள் மற்றும் குழந்தைகளுக்கான தின்பண்டங்கள் உள்ளிட்டவைகளை எடுத்து சென்றுவிடுகின்றது. அதனை குடியிருப்புவாசிகள் பிடுங்க முயலும்போது துரத்தி கடிக்க முயல்கின்றது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சமடைந்து வருகின்றனர்.