அமமுக சார்பில் 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரிப்பு: டிடிவி அறிவிப்பு

சென்னை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்ட அறிக்கை:அன்னை தமிழ்மொழியை காத்து நின்றிடவும் நம் தாய்மொழிக்கு கிடைக்க வேண்டிய பெருமைகள் அனைத்தையும் பெற்றுத்தந்திடவும் காலத்திற்கேற்ற வகையில் தமிழின் வளர்ச்சியை ஊக்குவித்திடவும் பாடுபட மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாளில் உறுதியேற்றிடுவோம்.

ஒன்றிய அரசுக்கு கோரிக்கை:  இந்திய ஆட்சி பணி அதிகாரிகளை மாநில இசைவின்றியே எப்போது வேண்டுமானாலும் ஒன்றிய பணிக்கு அழைத்துக் கொள்ளும் வகையில் ஒன்றிய அரசு விதிகளை திருத்தப்போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இப்படி ஒரு முடிவெடுக்க ஒன்றிய அரசு தீர்மானித்திருந்தால் அதனை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் மாநிலங்களில் மிகப்பெரிய நிர்வாக சீர்குலைவு ஏற்படுவதுடன் ஒன்றிய, மாநில அரசுகளின் உறவும் சிக்கலாகிவிடும்.

Related Stories: