சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 26ம் தேதி வைகை எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தாம்பரம் பகுதியில் வரும் 26ம் தேதி பராமரிப்பு பணிகள் நடப்பதால் காரைக்குடி- சென்னை எழும்பூர் (12606) இடையே காரைக்குடியில் இருந்து காலை 5.05 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் செங்கல்பட்டு- சென்னை எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.