சென்னை: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளர் வீட்டில் நடந்த நகை திருட்டு வழக்கில், சந்தேகத்தின் அடிப்படையில் சேலம் கருப்பூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான பிரபாகரனை சேந்தமங்கலம் போலீசார் கைது செய்து நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனர். உடல்நிலை சரியில்லை என்று பிரபாகரனை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அன்றிரவே அவர் உயிரிழந்தார். பிரபாகரனின் மரணம் தொடர்பாக சேந்தமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் உட்பட 3 பேர் சேலம் டிஐஜியால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.