சென்னை: தமிழகத்தில் 30 ஆயிரத்தை தினசரி கொரோனா பாதிப்பு நெருங்குகிறது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; மாநிலம் முழுவதும் இதுவரை 6,02,90,114 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 1,54,282 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 29,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 30,72,666ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 37,145ஆக அதிகரித்துள்ளது.