சென்னை: கேளம்பாக்கத்தில் ராமராஜ்யம் என்ற பெயரில் ஆசிரமமும், சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியும் நடத்தி வந்தவர் சிவசங்கர் பாபா. இவர் மீது அதே பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் தொடர்பாக கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனடிப்படையில் சிவசங்கர் பாபா கடந்த 2021 ஜூன் 16ம் தேதி கைது செய்யப்பட்டார்.