கடையம்: கடையத்திலிருந்து அம்பை செல்லும் சாலையில் ஐயம்பிள்ளை குளம் உள்ளது. இந்த குளத்திற்கு எதிர்புறம் சாலையை யொட்டி தென்காசி மற்றும் செங்கோட்டை பகுதிகளுக்கு குழாய் மூலம் தாமிரபரணி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சாலையில் எப்போதும் வாகனங்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். இந்நிலையில் ஐயம்பிள்ளை குளத்திற்கு எதிர்புறம் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்கிறது. இந்த உடைப்பால் அதில் பெரிய பள்ளம் உருவானது. பள்ளம் இருப்பது தெரியாமல் இதில் வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைந்து வருகின்றனர். நேற்று ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வரும் போது சாலையின் அருகே சென்றபோது அந்த பள்ளத்தில் விழுந்து காயமடைந்தார்.