சென்னை: தமிழகத்தில் ஜனவரி 23ஆம் தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் கொரோனா பரவல் காரணமாக பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் இந்த போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படும். இந்த ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து அனைவர்க்கும் போடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒன்றிய அரசு கொடுத்துள்ள விதிமுறைகளின் படி தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 27ஆம் தேதி நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து போடப்படும் என்று தற்போது தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கோவிட் பாதுகாப்பு காரணங்களுக்காக போலியோ சொட்டு மருந்து போடும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது 1 லட்சத்திற்கும் அதிகமானோர் தற்போது கோவிட் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.