கூடலூர்: கடந்த 8 மாதங்களாக ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியின் இளநிலை பயிற்சி மருத்துவர்கள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர். கடலூர் அரசு மருத்துவக்கல்லூரியாக இயங்கிவரும் இராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் தங்களுக்கு 8 மாதங்களாக ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என்பது இவர்களின் புகாராகும். தாங்கள் பலமுறை போராட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பயிற்சி மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று பயிற்சி மருத்துவர்கள் 75 பேர் கல்லூரி வளாகத்தில் காலவரையற்ற தர்ணா போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.