சென்னை: நீட் விலக்கு தொடர்பாக அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவை புறக்கணித்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் செயலைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தமிழ்நாட்டு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில பொருளாளர் என்.சுந்தராஜ் தலைமை தாங்கினார். கட்சியின் தலைவர் பொன்குமார் பேசுகையில், ‘‘ தமிழக எம்.பி. குழுவை அமித்ஷாவை சந்திப்பதற்கு முயற்சித்தும், அவர் நேரம் ஒதுக்கி தமிழக பாராளுமன்ற குழுவை சந்திக்கவில்லை.