முகக்கவசம் அணியாத 5,195 பேரிடம் ரூ.10.39 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில்,  நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நேற்று  காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கில், சென்னையில் சட்டம், ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் ரோந்து பணிகள் மேற்கொண்டனர். இரவு நேர ஊரடங்கில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் மீறியது தொடர்பாக 147 வழக்குகள் பதிவு செய்து, தேவையின்றி வெளியே சுற்றிய 228 இருசக்கர வாகனங்கள், 25 ஆட்டோக்கள். 7 லகுரக வாகனங்கள் மற்றும் 3 இதர வாகனங்கள் என மொத்தம் 263 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முகக்கவசம் அணியாதது தொடர்பாக 5,195 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.10,39,000 அபராதமும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.13,000 அபராதமும் வசூலிக்கப்பட்டது. மதுபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 2 இருசக்கர வாகனங்கள், 1 ஆட்டோ மற்றும் 2 லகுரக மற்றும் 1 இதர வாகனம் என மொத்தம் 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories: