திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அன்னப்பறவை வாகனத்தில் கோயில் உட் பிரகார உலா வந்து அருள்பாவித்த மாரியம்மன்

திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா   கடந்த 9 -ம்  நேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நான்காம் நாளான மாரியம்மன் அன்னப்பறவை வாகனத்தில் கோயில் உட் பிரகார  உலா வந்து அருளினார். தமிழகத்தில் அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோயில் ஆகும். இங்கு வருடந்தோறும் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழாவை முன்னிட்டு உற்சவர் மாரியம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.

 விழாவின் நான்காம் நாளான நேற்று அம்மன் வசந்த மண்டபத்தில்  அன்னப்பறவை  வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள்பிரகார உலா  வந்துஅருளினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செல்வராஜ் (கூடுதல் பொறுப்பு) தலைமையில் கோயில் பணியாளர்கள் மற்றும் கோயில் குருக்கள் செய்திருந்தனர்.

Related Stories: