சென்னை: சென்னை விமான நிலைய ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், கடந்த 2018ம் ஆண்டு போகி பண்டிகையின்போது, பழைய பொருட்கள், டயர்கள், பிளாஸ்டிக் கழிவுகளை எரித்ததால் கடும் புகை சூழ்ந்து, 118 விமானங்கள் புறப்பாடு மற்றும் வருகை பாதிக்கப்பட்டது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக விமானநிலைய ஆணையரகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, அதற்கு பிறகு, இதுபோன்ற சம்பவங்கள் தடுக்கப்பட்டது.