கன்டெய்னர் மோதி சிஆர்பிஎப் வீரர் பலி

தண்டையார்பேட்டை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் மோகன் (33). இவர், சென்னை துறைமுகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, மகன், மகள் உள்ளனர். புதுவண்ணாரப்பேட்டை துறைமுகம் குடியிருப்பில் வசித்த இவர், நேற்று முன்தினம் இரவு பைக்கில், காசிமேடு ஜீரோ கேட் வழியாக பணிக்கு சென்றார். அப்போது, அவ்வழியே சென்ற கன்டெய்னர் லாரி இவர் மீது மோதியதில், நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது, தலைக்கவசம் அணிந்திருந்த அவரது தலை மீது, லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. ஆனாலும், தலை நசுங்கி மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Related Stories: