சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி, பூ , பழம் , உணவு தானியம் ஆகிய மார்க்கெட்டில், கொரோனா தொற்று பரவலை தடுக்க சி.எம்.டி.ஏ அதிகாரிகள், மாநகராட்சியினர், கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். சென்னையில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வரும் நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் தமிழக அரசின் உத்தரவின்படி, சிஎம்டிஏ சார்பில், கொரோனா விழிப்புணர்வு தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. அதே போல் காய்கறி, பூ , பழம், உணவு தானியம் ஆகிய மார்க்கெட் பகுதிகளில் வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என, கொரோனா விழிப்புணர்வு அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். மேலும், வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு ஊசி போடும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர்.