சென்னை: கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருப்பவர்கள் பின்பற்ற வேண்டியவை குறித்து சென்னை மாநகராட்சி கூறியதாவது: தனி கழிவறையுடன் கூடிய காற்றோட்டம் உள்ள தனிஅறையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், வீட்டில் உள்ளவர்கள் உங்கள் அறையில் நுழையக் கூடாது, சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும், மற்றவர்களிடம் தொடர்பு இல்லாதவாறு உணவை பெற்றுக்கொள்ளுங்கள், போதுமான அளவு தண்ணீர், பழரசம் குடிக்கவும், பிறரிடம் பேசுவதை தவிர்த்து விடுங்கள், மீறி தொடர்பு கொள்ள நேரிட்டால் சர்ஜிக்கல் அல்லது என் 95 முகக்கவசம் அணிந்து பேசுங்கள், போதிய ஓய்வும், தூக்கமும் அவசியம், சோர்வு ஏற்படுத்தும் செயல்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.