சென்னை: ஊத்துக்கோட்டை தனியார் மருத்துவமனையில் டாக்டர் இல்லாமல் பிரசவம் பார்த்ததால், அக்குழந்தை இறந்து பிறந்தது. இது தொடர்பாக மருத்துவமனையை சேர்ந்த 3 நர்ஸ்களை போலீசார் கைது செய்தனர். மேலும், 2 பேரை தேடி வருகின்றனர். ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 4ம் தேதி ராமலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த காமேஷ் (35) என்பவர் தனது மனைவி திவ்யா (30) என்பவரை 2வது குழந்தைக்காக பிரசவத்திற்கு சேர்த்தார். அப்போது, டாக்டர் இல்லாமல் நர்சுகள் பிரசவம் பார்த்துள்ளனர். சுகபிரசவம் மூலம் பெண் குழந்தை பிறந்து உள்ளது. ஆனால், அந்த குழந்தை இறந்தநிலையில் பிறந்துள்ளது என்று நர்சுகள் காமேஷிடம் கூறினர்.