சென்னை: மக்கள் நீதி மய்யம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை:யுபிஎஸ்சி மெயின் தேர்வு திட்டமிட்டபடி ஜனவரி 7, 8, 9, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படும் என்பதால், பணி நிமித்தமாக வெளியூர்களில் வசிக்கும் அனைவரும் சொந்த ஊருக்கு சென்று விழாவை கொண்டாடுவார்கள். இந்நாட்களில் தேர்வு நடத்தப்படுவது தமிழர்களின் பண்பாட்டில் கைவைக்கும் செயல்.ஒமிக்ரான் பரவல்
அதிகரிப்பால் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாட்களிலும் தேர்வு நடத்தப்படுகிறது. எனவே, தேர்வர்களின் நலனை ஒன்றிய அரசு கவனத்தில் கொண்டு, உடனே தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும்.